அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபயனில சொல்லாமைPayanila Sollaamai
குறள் 200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
Solluka Sollir Payanutaiya Sollarka
Sollir Payanilaach Chol
To purpose speak the fruitful word And never indulge in useless load
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
SP (சாலமன் பாப்பையா)
சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.
MK (மு.கருணாநிதி)
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்
Couplet
If speak you will, speak words that fruit afford,If speak you will, speak never fruitless word
Explanation
Speak what is useful, and speak not useless words