அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபயனில சொல்லாமைPayanila Sollaamai
குறள் 199
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
Poruldheerndha Pochchaandhunj Chollaar Maruldheerndha
Maasaru Kaatchi Yavar
The wise of spotless self-vision Slip not to silly words-mention
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
SP (சாலமன் பாப்பையா)
மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.
MK (மு.கருணாநிதி)
மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்
Couplet
The men of vision pure, from wildering folly free,Not e'en in thoughtless hour, speak words of vanity
Explanation
Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not