thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalதீவினையச்சம்Theevinaiyachcham
குறள் 201

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு.

Theevinaiyaar Anjaar Vizhumiyaar Anjuvar

Theevinai Ennum Serukku

Sinners fear not the pride of sin The worthy dread the ill within

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

SP (சாலமன் பாப்பையா)

தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.

MK (மு.கருணாநிதி)

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்

Couplet

With sinful act men cease to feel the dread of ill within,The excellent will dread the wanton pride of cherished sin

Explanation

Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin