thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalதீவினையச்சம்Theevinaiyachcham
குறள் 202

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

Theeyavai Theeya Payaththalaal Theeyavai

Theeyinum Anjap Patum

Since evil begets evil dire Fear ye evil more than fire

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

SP (சாலமன் பாப்பையா)

நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

MK (மு.கருணாநிதி)

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்

Couplet

Since evils new from evils ever grow,Evil than fire works out more dreaded woe

Explanation

Because evil produces evil, therefore should evil be feared more than fire