அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalதீவினையச்சம்Theevinaiyachcham
குறள் 203
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
Arivinul Ellaan Thalaiyenpa Theeya
Seruvaarkkum Seyyaa Vital
The wisest of the wise are those Who injure not even their foes
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
SP (சாலமன் பாப்பையா)
தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.
MK (மு.கருணாநிதி)
தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்
Couplet
Even to those that hate make no return of ill;So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil
Explanation
So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil