thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபயனில சொல்லாமைPayanila Sollaamai
குறள் 192

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கண் செய்தலிற் றீது.

Payanila Pallaarmun Sollal Nayanila

Nattaarkan Seydhalir Reedhu

Vain talk before many is worse Than doing to friends deeds adverse

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

SP (சாலமன் பாப்பையா)

ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.

MK (மு.கருணாநிதி)

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்

Couplet

Words without sense, where many wise men hear, to pourThan deeds to friends ungracious done offendeth more

Explanation

To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends