அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபயனில சொல்லாமைPayanila Sollaamai
குறள் 191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
Pallaar Muniyap Payanila Solluvaan
Ellaarum Ellap Patum
With silly words who insults all Is held in contempt as banal
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்
SP (சாலமன் பாப்பையா)
பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.
MK (மு.கருணாநிதி)
பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்
Couplet
Words without sense, while chafe the wise,Who babbles, him will all despise
Explanation
He who to the disgust of many speaks useless things will be despised by all