ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
Edhilaar Kutrampol Thangutrang Kaankirpin
Theedhunto Mannum Uyirkku
No harm would fall to any man If each his own defect could scan
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?
SP (சாலமன் பாப்பையா)
புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?
MK (மு.கருணாநிதி)
பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்
Couplet
If each his own, as neighbours' faults would scan,Could any evil hap to living man
Explanation
If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?