thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபுறங்கூறாமைPurangooraamai
குறள் 189

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்

புன்சொல் உரைப்பான் பொறை.

Arannokki Aatrungol Vaiyam Purannokkip

Punsol Uraippaan Porai

The world in mercy bears his load Who rants behind words untoward

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?

SP (சாலமன் பாப்பையா)

பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!

MK (மு.கருணாநிதி)

ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை `இவனைச் சுமப்பதும் அறமே' என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது

Couplet

'Tis charity, I ween, that makes the earth sustain their loadWho, neighbours' absence watching, tales or slander tell abroad

Explanation

The world through charity supports the weight of those who reproach others observing their absence