அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபயனில சொல்லாமைPayanila Sollaamai
குறள் 193
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
Nayanilan Enpadhu Sollum Payanila
Paarith Thuraikkum Urai
The babbler's hasty lips proclaim That \"good-for-nothing\" is his name
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
SP (சாலமன் பாப்பையா)
பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
MK (மு.கருணாநிதி)
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்
Couplet
Diffusive speech of useless words proclaimsA man who never righteous wisdom gains
Explanation
That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue."