thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபயனில சொல்லாமைPayanila Sollaamai
குறள் 193

நயனிலன் என்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கும் உரை.

Nayanilan Enpadhu Sollum Payanila

Paarith Thuraikkum Urai

The babbler's hasty lips proclaim That \"good-for-nothing\" is his name

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

SP (சாலமன் பாப்பையா)

பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.

MK (மு.கருணாநிதி)

பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்

Couplet

Diffusive speech of useless words proclaimsA man who never righteous wisdom gains

Explanation

That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue."