எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
Enpadhaththaal Eydhal Elidhenpa Yaarmaattum
Panputaimai Ennum Vazhakku
To the polite free of access Easily comes courteousness
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.
SP (சாலமன் பாப்பையா)
எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.
MK (மு.கருணாநிதி)
யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்
Couplet
Who easy access give to every man, they say,Of kindly courtesy will learn with ease the way
Explanation
If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness