thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalபண்புடைமைPanputaimai
குறள் 992

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

Anputaimai Aandra Kutippiraththal Ivvirantum

Panputaimai Ennum Vazhakku

Humanity and noble birth Develop courtesy and moral worth

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.

SP (சாலமன் பாப்பையா)

எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்.

MK (மு.கருணாநிதி)

அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்

Couplet

Benevolence and high born dignity,These two are beaten paths of courtesy

Explanation

Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all