thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalசான்றாண்மைSaandraanmai
குறள் 990

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

தாங்காது மன்னோ பொறை.

Saandravar Saandraanmai Kundrin Irunilandhaan

Thaangaadhu Manno Porai

The world will not more bear its weight If from high virtue fall the great

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.

SP (சாலமன் பாப்பையா)

சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்.

MK (மு.கருணாநிதி)

சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது

Couplet

The mighty earth its burthen to sustain must cease,If perfect virtue of the perfect men decrease

Explanation

If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden