thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்KudiyiyalகுடிமைKutimai
குறள் 953

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகையென்ப வாய்மைக் குடிக்கு.

Nakaieekai Insol Ikazhaamai Naankum

Vakaiyenpa Vaaimaik Kutikku

Smile, gift, sweet words and courtesy These four mark true nobility

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.

SP (சாலமன் பாப்பையா)

நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு முகமலர்ச்சி, இருப்பதைக் கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், கேலி பேசாமை என்னும் நான்கும் உரிய குணங்களாம்.

MK (மு.கருணாநிதி)

முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்

Couplet

The smile, the gift, the pleasant word, unfailing courtesyThese are the signs, they say, of true nobility

Explanation

A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born