ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
Ozhukkamum Vaaimaiyum Naanum Im
Moondrum Izhukkaar Kutippiran Thaar
The noble-born lack not these three: Good conduct, truth and modesty
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.
SP (சாலமன் பாப்பையா)
நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.
MK (மு.கருணாநிதி)
ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்
Couplet
In these three things the men of noble birth fail not:In virtuous deed and truthful word, and chastened thought
Explanation
The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty