thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்KudiyiyalகுடிமைKutimai
குறள் 952

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந் தார்.

Ozhukkamum Vaaimaiyum Naanum Im

Moondrum Izhukkaar Kutippiran Thaar

The noble-born lack not these three: Good conduct, truth and modesty

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.

SP (சாலமன் பாப்பையா)

நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.

MK (மு.கருணாநிதி)

ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்

Couplet

In these three things the men of noble birth fail not:In virtuous deed and truthful word, and chastened thought

Explanation

The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty