thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்KudiyiyalகுடிமைKutimai
குறள் 954

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர்.

Atukkiya Koti Perinum Kutippirandhaar

Kundruva Seydhal Ilar

Even for crores, the noble mood Cannot bend to degrading deed

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

SP (சாலமன் பாப்பையா)

கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.

MK (மு.கருணாநிதி)

பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்

Couplet

Millions on millions piled would never winThe men of noble race to soul-degrading sin

Explanation

Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming