thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஇனியவை கூறல்Iniyavaikooral
குறள் 93

முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.

Mukaththaan Amarndhuinidhu Nokki Akaththaanaam

Inso Linadhe Aram

Calm face, sweet look, kind words from heart Such is the gracious virtue's part

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

SP (சாலமன் பாப்பையா)

பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

MK (மு.கருணாநிதி)

முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்

Couplet

With brightly beaming smile, and kindly light of loving eye,And heart sincere, to utter pleasant words is charity

Explanation

Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue