பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபெண்வழிச் சேறல்Penvazhichcheral
குறள் 905
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
Illaalai Anjuvaan Anjumar Regngnaandrum
Nallaarkku Nalla Seyal
Who fears his wife fears always Good to do to the good and wise
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.
SP (சாலமன் பாப்பையா)
தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.
MK (மு.கருணாநிதி)
எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்
Couplet
Who quakes before his wife will ever tremble too,Good deeds to men of good deserts to do
Explanation
He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good