thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபெண்வழிச் சேறல்Penvazhichcheral
குறள் 906

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்

அமையார்தோள் அஞ்சு பவர்.

Imaiyaarin Vaazhinum Paatilare Illaal

Amaiyaardhol Anju Pavar

Who fear douce arms of their wives Look petty even with god-like lives

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.

SP (சாலமன் பாப்பையா)

தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.

MK (மு.கருணாநிதி)

அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது

Couplet

Though, like the demi-gods, in bliss they dwell secure from harm,Those have no dignity who fear the housewife's slender arm

Explanation

They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods