thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபெண்வழிச் சேறல்Penvazhichcheral
குறள் 904

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்

வினையாண்மை வீறெய்த லின்று.

Manaiyaalai Anjum Marumaiyi Laalan

Vinaiyaanmai Veereydha Lindru

Fearing his wife salvationless The weaklings' action has no grace

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

SP (சாலமன் பாப்பையா)

தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.

MK (மு.கருணாநிதி)

மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை

Couplet

No glory crowns e'en manly actions wroughtBy him who dreads his wife, nor gives the other world a thought

Explanation

The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded