thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபெரியாரைப் பிழையாமைPeriyaaraip Pizhaiyaamai
குறள் 893

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்

ஆற்று பவர்கண் இழுக்கு.

Ketalventin Kelaadhu Seyka Atalventin

Aatru Pavarkan Izhukku

Heed not and do, if ruin you want Offence against the mighty great

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.

SP (சாலமன் பாப்பையா)

ஒருவன் தான் அழிய எண்ணினால் பிறரை அழிப்பதைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம், நீதிநூல்கள் சொல்லும் வழிகளையும் எண்ணிப் பாராமல் பிழை செய்க.

MK (மு.கருணாநிதி)

ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்

Couplet

Who ruin covet let them shut their ears, and do despiteTo those who, where they list to ruin have the might

Explanation

If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns)