thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபெரியாரைப் பிழையாமைPeriyaaraip Pizhaiyaamai
குறள் 894

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்னா செயல்.

Kootraththaik Kaiyaal Viliththatraal Aatruvaarkku

Aatraadhaar Innaa Seyal

The weak who insult men of might Death with their own hands invite

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

SP (சாலமன் பாப்பையா)

அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.

MK (மு.கருணாநிதி)

எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்

Couplet

When powerless man 'gainst men of power will evil deeds essay,Tis beck'ning with the hand for Death to seize them for its prey

Explanation

The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them)