thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபெரியாரைப் பிழையாமைPeriyaaraip Pizhaiyaamai
குறள் 892

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்

பேரா இடும்பை தரும்.

Periyaaraip Penaadhu Ozhukir Periyaaraal

Peraa Itumpai Tharum

To walk unmindful of the great Shall great troubles ceaseless create

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

SP (சாலமன் பாப்பையா)

பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.

MK (மு.கருணாநிதி)

பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்

Couplet

If men will lead their lives reckless of great men's will,Such life, through great men's powers, will bring perpetual ill

Explanation

To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils