thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபெரியாரைப் பிழையாமைPeriyaaraip Pizhaiyaamai
குறள் 891

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலுள் எல்லாம் தலை.

Aatruvaar Aatral Ikazhaamai Potruvaar

Potralul Ellaam Thalai

Not to spite the mighty ones Safest safeguard to living brings

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.

SP (சாலமன் பாப்பையா)

எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

MK (மு.கருணாநிதி)

ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்

Couplet

The chiefest care of those who guard themselves from ill,Is not to slight the powers of those who work their mighty will

Explanation

Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil)