thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபுல்லறிவாண்மைPullarivaanmai
குறள் 843

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை

செறுவார்க்கும் செய்தல் அரிது.

Arivilaar Thaandhammaip Peezhikkum Peezhai

Seruvaarkkum Seydhal Aridhu

The self-torments of fools exceed Ev'n tortures of their foes indeed

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.

SP (சாலமன் பாப்பையா)

அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது.

MK (மு.கருணாநிதி)

எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்

Couplet

With keener anguish foolish men their own hearts wring,Than aught that even malice of their foes can bring

Explanation

The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes