thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபுல்லறிவாண்மைPullarivaanmai
குறள் 842

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்

இல்லை பெறுவான் தவம்.

Arivilaan Nenjuvandhu Eedhal Piridhiyaadhum

Illai Peruvaan Thavam

When fool bestows with glee a gift It comes but by getter's merit

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.

SP (சாலமன் பாப்பையா)

அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.

MK (மு.கருணாநிதி)

அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்

Couplet

The gift of foolish man, with willing heart bestowed, is nought,But blessing by receiver's penance bought

Explanation

(The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth)