thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபுல்லறிவாண்மைPullarivaanmai
குறள் 841

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை

இன்மையா வையா துலகு.

Arivinmai Inmaiyul Inmai Piridhinmai

Inmaiyaa Vaiyaa Thulaku

Want of wisdom is want of wants Want of aught else the world nev'r counts

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

SP (சாலமன் பாப்பையா)

இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்.

MK (மு.கருணாநிதி)

அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும் மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது

Couplet

Want of knowledge, 'mid all wants the sorest want we deem;Want of other things the world will not as want esteem

Explanation

The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such