thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபுல்லறிவாண்மைPullarivaanmai
குறள் 844

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை

உடையம்யாம் என்னும் செருக்கு.

Venmai Enappatuva Thiyaadhenin Onmai

Utaiyamyaam Ennum Serukku

Stupidity is vanity That cries \"We have sagacity\"

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.

SP (சாலமன் பாப்பையா)

அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.

MK (மு.கருணாநிதி)

ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்

Couplet

What is stupidity? The arrogance that cries,'Behold, we claim the glory of the wise.'

Explanation

What is called want of wisdom is the vanity which says, "We are wise"