thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்NatpiyalபழைமைPazhaimai
குறள் 805

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க

நோதக்க நட்டார் செயின்.

Pedhaimai Ondro Perungizhamai Endrunarka

Nodhakka Nattaar Seyin

Offence of friends feel it easy As folloy or close intimacy

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக.

MK (மு.கருணாநிதி)

வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்

Couplet

Not folly merely, but familiar carelessness,Esteem it, when your friends cause you distress

Explanation

If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy