thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்NatpiyalபழைமைPazhaimai
குறள் 804

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

கேளாது நட்டார் செயின்.

Vizhaidhakaiyaan Venti Iruppar Kezhudhakaiyaar

Kelaadhu Nattaar Seyin

Things done unasked by loving friends Please the wise as familiar trends!

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.

SP (சாலமன் பாப்பையா)

தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத் தாம் அறிந்திருந்தாலும் நண்பரால் விரும்பிச் செய்யப்படுவது என்பதனால் அறிவுடையார் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வர்.

MK (மு.கருணாநிதி)

பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்

Couplet

When friends unbidden do familiar acts with loving heart,Friends take the kindly deed in friendly part

Explanation

If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability