thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்NatpiyalபழைமைPazhaimai
குறள் 806

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்

தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

Ellaikkan Nindraar Thuravaar Tholaivitaththum

Thollaikkan Nindraar Thotarpu

They forsake not but continue In friendship's bounds though loss ensue

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.

SP (சாலமன் பாப்பையா)

நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார்.

MK (மு.கருணாநிதி)

நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்

Couplet

Who stand within the bounds quit not, though loss impends,Association with the old familiar friends

Explanation

Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends