பொருட்பால்Porutpaalபடையில்Padaiyilபடைச் செருக்குPataichcherukku
குறள் 779
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
Izhaiththadhu Ikavaamaich Chaavaarai Yaare
Pizhaiththadhu Orukkir Pavar
Who will blame the heroes that lose Their lives in war to keep their vows?
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.
SP (சாலமன் பாப்பையா)
தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?
MK (மு.கருணாநிதி)
சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது
Couplet
Who says they err, and visits them scorn,Who die and faithful guard the vow they've sworn
Explanation
Who would reproach with failure those who seal their oath with their death ?