thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalபடையில்Padaiyilபடைச் செருக்குPataichcherukku
குறள் 778

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்

செறினும் சீர்குன்றல் இலர்.

Urinuyir Anjaa Maravar Iraivan

Serinum Seerkundral Ilar

The king may chide, they pursue strife; They fear loss of glory; not life

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.

SP (சாலமன் பாப்பையா)

போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.

MK (மு.கருணாநிதி)

தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்

Couplet

Fearless they rush where'er 'the tide of battle rolls';The king's reproof damps not the ardour of their eager souls

Explanation

The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting)