thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalபடையில்Padaiyilபடைச் செருக்குPataichcherukku
குறள் 773

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்

ஊராண்மை மற்றதன் எஃகு.

Peraanmai Enpa Tharukanon Rutrakkaal

Ooraanmai Matradhan Eqku

Valour is fight with fierce courage Mercy to the fallen is its edge

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

SP (சாலமன் பாப்பையா)

பகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும்.

MK (மு.கருணாநிதி)

பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும் அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்

Couplet

Fierceness in hour of strife heroic greatness shows;Its edge is kindness to our suffering foes

Explanation

The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour