thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalபடையில்Padaiyilபடைச் செருக்குPataichcherukku
குறள் 772

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

Kaana Muyaleydha Ampinil Yaanai

Pizhaiththavel Endhal Inidhu

To lift a lance that missed a tusker Is prouder than shaft that hit a hare

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

SP (சாலமன் பாப்பையா)

காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.

MK (மு.கருணாநிதி)

வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது

Couplet

Who aims at elephant, though dart should fail, has greater praiseThan he who woodland hare with winged arrow slays

Explanation

It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest