thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalபடையில்Padaiyilபடை மாட்சிPataimaatchi
குறள் 764

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த

வன்க ணதுவே படை.

Azhivindri Araipokaa Thaaki Vazhivandha

Vanka Nadhuve Patai

The army guards its genial flame Not crushed, routed nor marred in name

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

SP (சாலமன் பாப்பையா)

போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.

MK (மு.கருணாநிதி)

எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்

Couplet

That is a host, by no defeats, by no desertions shamed,For old hereditary courage famed

Explanation

That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy)