ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.
Oliththakkaal Ennaam Uvari Ela�ppakai
Naakam Uyirppak Ketum
Sea-like ratfoes roar What if? They perish at a cobra's whiff
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.
SP (சாலமன் பாப்பையா)
பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.
MK (மு.கருணாநிதி)
எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்
Couplet
Though, like the sea, the angry mice send forth their battle cry;What then? The dragon breathes upon them, and they die
Explanation
What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra