thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரணியல்Araniyalஅரண்Aran
குறள் 741

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்

போற்று பவர்க்கும் பொருள்.

Aatru Pavarkkum Aranporul Anjiththar

Potru Pavarkkum Porul

The fort is vital for offence Who fear the foes has its defence

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.

SP (சாலமன் பாப்பையா)

பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது.

MK (மு.கருணாநிதி)

பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்

Couplet

A fort is wealth to those who act against their foes;Is wealth to them who, fearing, guard themselves from woes

Explanation

A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter