ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
Aangamai Veydhiyak Kannum Payamindre
Vendhamai Villaadha Naatu
Though a land has thus every thing It is worthless without a king
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.
SP (சாலமன் பாப்பையா)
மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை.
MK (மு.கருணாநிதி)
நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்
Couplet
Though blest with all these varied gifts' increase,A land gains nought that is not with its king at peace
Explanation
Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujects