மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
Manineerum Mannum Malaiyum Aninizhar
Kaatum Utaiya Tharan
A crystal fount, a space a mount Thick woods form a fort paramount
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.
SP (சாலமன் பாப்பையா)
தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.
MK (மு.கருணாநிதி)
ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்
Couplet
A fort is that which owns fount of waters crystal clear,An open space, a hill, and shade of beauteous forest near
Explanation
A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests