thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரணியல்AraniyalநாடுNaatu
குறள் 734

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு.

Urupasiyum Ovaap Piniyum Serupakaiyum

Seraa Thiyalvadhu Naatu

It is country which is free from Fierce famine, plague and foemen's harm

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

SP (சாலமன் பாப்பையா)

மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.

MK (மு.கருணாநிதி)

பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்

Couplet

That is a 'land' whose peaceful annals know,Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe

Explanation

A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes