thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரணியல்AraniyalநாடுNaatu
குறள் 733

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு

இறையொருங்கு நேர்வது நாடு.

Poraiyorungu Melvarungaal Thaangi Iraivarku

Iraiyorungu Nervadhu Naatu

It's land that bears pressing burdens And pays its tax which king demands

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.

SP (சாலமன் பாப்பையா)

போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.

MK (மு.கருணாநிதி)

புதிய சுமைகள் ஒன்றுணிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும்

Couplet

When burthens press, it bears; Yet, With unfailing handTo king due tribute pays: that is the 'land'

Explanation

A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign