பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.
Perumporulaal Pettakka Thaaki Arungettaal
Aatra Vilaivadhu Naatu
The Land has large luring treasure Where pests are nil and yields are sure
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.
SP (சாலமன் பாப்பையா)
மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.
MK (மு.கருணாநிதி)
பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்
Couplet
That is a 'land' which men desire for wealth's abundant share,Yielding rich increase, where calamities are rare
Explanation
A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes