thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரணியல்AraniyalநாடுNaatu
குறள் 732

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்

ஆற்ற விளைவது நாடு.

Perumporulaal Pettakka Thaaki Arungettaal

Aatra Vilaivadhu Naatu

The Land has large luring treasure Where pests are nil and yields are sure

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

SP (சாலமன் பாப்பையா)

மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.

MK (மு.கருணாநிதி)

பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்

Couplet

That is a 'land' which men desire for wealth's abundant share,Yielding rich increase, where calamities are rare

Explanation

A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes