thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரணியல்AraniyalநாடுNaatu
குறள் 731

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு.

Thallaa Vilaiyulum Thakkaarum Thaazhvilaach

Chelvarum Servadhu Naatu

It's country which has souls of worth Unfailing yields and ample wealth

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.

SP (சாலமன் பாப்பையா)

குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.

MK (மு.கருணாநிதி)

செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்

Couplet

Where spreads fertility unfailing, where resides a band,Of virtuous men, and those of ample wealth, call that a 'land'

Explanation

A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and