thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரணியல்AraniyalநாடுNaatu
குறள் 735

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு.

Palkuzhuvum Paazhseyyum Utpakaiyum Vendhalaikkum

Kolkurumpum Illadhu Naatu

Sects and ruinous foes are nil No traitors in a land tranquil

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.

SP (சாலமன் பாப்பையா)

சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் சொந்தக் கட்சியினர், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு.

MK (மு.கருணாநிதி)

பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும்

Couplet

From factions free, and desolating civil strife, and bandOf lurking murderers that king afflict, that is the 'land'

Explanation

A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereign