thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalஅவை அஞ்சாமைAvaiyanjaamai
குறள் 721

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.

Vakaiyarindhu Vallavai Vaaisoraar Sollin

Thokaiyarindha Thooimai Yavar

The pure fail not in power of words Knowing grand council's moods and modes

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.

SP (சாலமன் பாப்பையா)

சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்.

MK (மு.கருணாநிதி)

சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்

Couplet

Men, pure in heart, who know of words the varied force,The mighty council's moods discern, nor fail in their discourse

Explanation

The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body