thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalஅவை அறிதல்Avaiyaridhal
குறள் 720

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்

அல்லார்முன் கோட்டி கொளல்.

Anganaththul Ukka Amizhdhatraal Thanganaththaar

Allaarmun Kotti Kolal

To hostiles who wise words utters Pours ambrosia into gutters

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.

SP (சாலமன் பாப்பையா)

தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.

MK (மு.கருணாநிதி)

அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்

Couplet

Ambrosia in the sewer spilt, is wordSpoken in presence of the alien herd

Explanation

To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground