thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalஅவை அஞ்சாமைAvaiyanjaamai
குறள் 722

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்.

Katraarul Katraar Enappatuvar Katraarmun

Katra Selachchollu Vaar

Among scholars he is scholar Who holds scholars with learned lore

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.

SP (சாலமன் பாப்பையா)

தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்.

MK (மு.கருணாநிதி)

கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்

Couplet

Who what they've learned, in penetrating words heve learned to say,Before the learn'd among the learn'd most learn'd are they

Explanation

Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned