thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalஇடுக்கண் அழியாமைItukkan Azhiyaamai
குறள் 623

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்.

Itumpaikku Itumpai Patuppar Itumpaikku

Itumpai Pataaa Thavar

Grief they face and put to grief Who grieve not grief by mind's relief

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.

SP (சாலமன் பாப்பையா)

வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.

MK (மு.கருணாநிதி)

துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்

Couplet

Who griefs confront with meek, ungrieving heart,From them griefs, put to grief, depart

Explanation

They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow