thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalஇடுக்கண் அழியாமைItukkan Azhiyaamai
குறள் 624

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

Matuththavaa Yellaam Pakatannaan Utra

Itukkan Itarppaatu Utaiththu

Who pulls like bulls patiently on Causes grief to grieve anon

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.

SP (சாலமன் பாப்பையா)

செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.

MK (மு.கருணாநிதி)

தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்

Couplet

Like bullock struggle on through each obstructed way;From such an one will troubles, troubled, roll away

Explanation

Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a